Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடடா... பூவின் மாநாடா... இன்று ஓணம் ... பழநி கோவில் உண்டியல் வசூல் 1.17 கோடியைத் தாண்டியது! பழநி கோவில் உண்டியல் வசூல் 1.17 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஓணம் விருந்து : மழையிலும் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஆக
2012
10:08

சபரிமலை: ஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பலத்த மழையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடை திறந்திருக்கும் நான்கு நாட்களிலும், பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, ஓணம் பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. இதன்பின், ஓணம் பண்டிகை விருந்துக்குத் தேவைப்படும் பதார்த்தங்களை தயார் செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. நேற்று மதியம் உச்சிக்கால பூஜைக்குப் பின், பக்தர்களுக்கு உத்திராட ஓணம் விருந்து பரிமாறப்பட்டது. பால் பாயாசம், அடை பிரதமன் ஆகிய இரு இனிப்புகளுடன், 20 வகைப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இன்று, நாளை, நாளை மறுநாளும் விருந்து வழங்கப்படும். சபரிமலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வரும் நிலையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடை திறந்திருக்கும் நாட்களில் தினமும், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சந்தன அபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் முடிந்து, நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். இதன்பின், புரட்டாசி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை அடுத்த மாதம், 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்புபூஜை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை; கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் துவக்கமாக 7 கிராம மக்கள் கூழ் ... மேலும்
 
temple news
திருத்தணி; வைகாசி, ஐப்பசி மாதங்களை போல் முருக பெருமானை வழிபடுவதற்கு சிறப்பான மாதமாக, சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar