Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... பாலாற்றில் முடவன் முழுக்கு நிகழ்ச்சி மணலில் லிங்க வழிபாடு பாலாற்றில் முடவன் முழுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் நேரத்தை கடை பிடிக்க வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் நேரத்தை கடை பிடிக்க வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

18 நவ
2022
08:11

சபரிமலை, புல்மேடு மற்றும் பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக பயணம் செய்ய நேரவிதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.


சபரிமலையில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெருமழையும், கொரோனாவும் ஏற்படுத்திய தடைகளுக்கு பின்னர் இந்த சீசனில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த பெருவழிப்பாதை, புல்மேடு பாதை போன்ற அனைத்து பாதைகளும் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருவழிப்பாதையில் செல்பவர்கள் எருமேலியில் மாலை 4:00 மணிக்கு முன்னரும், புல்மேடு பாதையில் வருபவர்கள் சத்திரத்தில் மதியம் 2:00 மணிக்கு முன்னரும் புறப்பட வேண்டும். இந்த பாதைகளில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் அவசர சிகிச்சை மையங்கள் நிறுவப்படும். சன்னிதானம், பம்பை அரசு மருத்துவமனைகளில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடத்துவதற்காக அதற்குரிய முதுநிலை டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் அதற்கேற்ப அனைத்துதுறை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும். பக்தர்கள் பாதை ஓரங்களில் சிறுநீர் கழிக்கும் நிலையை முழுமையாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருவாயூர், கொச்சி, மலபார் தேவசம்போர்டுகளும் பக்தர்களுக்கு தேவயான வசதிகளை அந்தந்த பகுதிகளில் செய்யும். முககிய வழிபாட்டு பிரசாதமான அப்பம், அரவணை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரவணை 16 லட்சம் டின், அப்பம் இரண்டு லட்சம் பாக்கெட் ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. தினமும் ஒன்றே முக்கால் லட்சம் டின் அரவணை தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar