Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் தங்கத் தேர் ... காரைக்காலில் அகல்விளக்கு செய்யும் பணி தீவிரம் காரைக்காலில் அகல்விளக்கு செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மவுனசாமி மடத்தில் 4 ஐம்பொன் சிலைகள், ஓவியம் பறிமுதல்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் மவுனசாமி மடத்தில் 4 ஐம்பொன் சிலைகள், ஓவியம் பறிமுதல்

பதிவு செய்த நாள்

24 நவ
2022
11:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான மவுனசாமி மடத்தின் நிர்வாகி பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக, பல்வேறு ஹிந்து அனுப்பினர், 20 பேர் கையெழுத்திட்ட மனுவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சமீபத்தில் வழங்கினர்.

இதையடுத்து, மடத்தின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சிலைகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்தனர். ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பிறப்பித்த சோதனை உத்தரவுகளுடன் மவுனசாமி மடத்தில் சோதனை செய்தனர். சோதனையின் போது, மடத்தின் ஒரு பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சிலைகளை குழுவினர் கண்டுபிடித்தனர். சிலைகளின் ஆதாரத்தை நிரூபிக்குமாறு மடாலய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மடத்து அதிகாரிகளால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை, மேலும் அவர்கள் தங்களிடம் உள்ள சிலைகள் ஆதாரம் இல்லாத சட்டவிரோத சிலைகள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையெடுத்து, 23 செ.மீ., உயரம் உள்ள நடராஜர், 14 செ.மீ.. உயரம் உள்ள திருவாசியுடன் கூடிய சிவகாமி அம்மன் சிலை,11 செ.மீ., உயரமுள்ள விநாயகர்,37 செ.மீ., உயரம் உள்ள பாலதண்டாயுதபாணி சிலைகள் மற்றும் 63 நாயன்மார்கள் தஞ்சாவூர் பாணி ஓவியம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar