பதிவு செய்த நாள்
02
டிச
2022
07:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கையில் தங்கம், வெள்ளி எவ்வளவு கிராம் என வெளியிடாதது ஏன் என ஹிந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
நவ., 29 ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் கல்யாண மண்டபத்தில் ஊழியர்கள் எண்ணினார்கள். இதனை பத்திரிக்கை, ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக காணிக்கை எண்ணுவதையும், காணிக்கை தொகை விவரத்தையும் பத்திரிகைகளுக்கு கோயில் நிர்வாகம் தெரிவிக்காமல் முடி மறைத்தது. இந்நிலையில் நேற்று கோயில் அம்மன் முகப்பு மண்டபம் முன்பு தகவல் பலகையில் காணிக்கை பணம் ரூ. 2 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 1 ரூபாய் என தெரிவித்துள்ளது. அப்படியெனில் தங்கம், வெள்ளி எவ்வளவு கிராம் என வெளியிடாதது ஏன் ? என மர்மமாக உள்ளது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் : கோயில் உண்டியல் பணம், தங்கம், வெள்ளி குறித்து பத்திரிகைக்கு தெரிவிக்காமல், தகவல் பலகை வைத்து பணம் விவரம் மட்டும் வெளியிட்டது ஏன். அப்படியெனில் காணிக்கையில் தங்கம், வெள்ளி ஒரு கிராமம் கூட வரவில்லையா. இல்லை தங்கம், வெள்ளி விவரத்தை மூடி மறைக்க அரசு திட்டமிட்டு உள்ளதோ என சந்தேகம் எழுகிறது இதற்கு அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.