பதிவு செய்த நாள்
02
டிச
2022
07:12
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன், திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று 2 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை நடக்கிறது. விழாவையொட்டி, அதிகாலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 7:45 மணிக்கு கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8:00 மணிக்கு ஸ்ரீ விநாயகர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 8:30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோபுர மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து, 8:40 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூஜை, மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக காலை 7:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.