Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் கோவில்களில் ஜோதி ஏற்றி ... சதுரகிரியில் பவுர்ணமி பூஜை பக்தர்கள் சுவாமி தரிசனம் சதுரகிரியில் பவுர்ணமி பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீப தரிசன டிக்கெட் ரூ.2,000த்துக்கு பிளாக்கில் விற்பனை
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் பரணி தீப தரிசன டிக்கெட் ரூ.2,000த்துக்கு பிளாக்கில் விற்பனை

பதிவு செய்த நாள்

08 டிச
2022
02:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பரணி தீப தரிசன டிக்கெட், 2,000 ரூபாய் என பிளாக்கில் விற்றது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட்டது. பரணி தீபம் டிக்கெட், ஆன்லைன் மூலமாக, 500 ரூபாய் கட்டணத்தில், 500 பேருக்கும், மஹா தீபம், 600 ரூபாய் கட்டணத்தில், 100 பேருக்கும், 500 ரூபாய் கட்டண டிக்கெட், 1,000 பேருக்கும், ஒருவருக்கு, ஒரு டிக்கெட் வீதம், கோவில் நிர்வாகம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது. இவை அரை மணி நேரத்திலேயே விற்று தீர்ந்தன. இந்நிலையில், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட, பரணி தீப டிக்கெட், பிளாக்கில், 2,000 ரூபாய்க்கு வாலிபர் ஒருவர் விற்பனை செய்ததாக வீடியோ வைரலானது. இதற்கு, இந்து முன்னணி, வேலுார் கோட்ட தலைவர் சதீஷ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: மாவட்ட நிர்வாகம், தி.மு.க., அரசின் ஏவலாக உள்ளது. தீப திருவிழா தரிசன பாஸ்,  தி.மு.க., கவுன்சிலர்களுக்கு, 20 பாஸ், வட்ட செயலாளர்களுக்கு, 10 பாஸ் என, ஆயிரக்கணக்கான பாஸ் என வினியோகம் செய்து,  2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம், தி.மு.க.,வின் கள்ளச்சந்தையாக உள்ளது. அமைச்சர் வேலுவின் மகன் கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் உள்ளது. கோவிலினுள் சென்றால், கடவுள் முன் அனைவரும் சமம். ஆனால், ஆகம விதி மீறி, கோவிலின் மேல், முக்கிய பிரமுகர்களுக்கு ஷெட் அமைக்கப்பட்டது. கோவிலினுள் சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களின் பக்தியையும், நம்பிக்கையும், திராவிட மாடல் அரசு, காசாக்கி கொண்டிருக்கிறது. டிக்கெட் விற்பனையில். தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அப்படி இல்லையெனில், டிக்கெட் விற்ற நபரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar