Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடுகநாத சுவாமி கோவிலில் தேய்பிறை ... சக்தி குமரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா சக்தி குமரன் கோயிலில் தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா: டிச. 28ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா: டிச. 28ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 டிச
2022
02:12

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயமாக திகழ்கிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்று மரகத நடராஜப் பெருமானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வருகிற டிச.,28 அன்று முதல் 2023 ஜன., 6 வரை மாணிக்கவாசகர் திருநாளும் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. தனி சன்னதியாக வீற்றிருக்கும் பச்சை மரகத நடராஜருக்கு 2023 ஜன., 5 (வியாழக்கிழமை) காலை 9:00 மணியளவில் மூலவரின் திருமேனியில் கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனம் படிகளைதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின் சந்தனாதி தைலம் பூசப்பட்டு மூலவர் மரகத நடராஜருக்கு 22 வகையான அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. கோயில் வளாகத்தில் தடுப்பு வரிசையில் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஏனென்றால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்தனம் அகற்றப்பட்ட மூலவரின் திருமேனி தரிசனத்திற்காக பக்தர்கள் திரண்டு வருகின்றனர். ஒலி, ஒளியால் சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காக சந்தனத்தால் காப்பிட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. வருடத்தில் 364 நாட்களிலும் மரகத நடராஜரின் சன்னதி முன்பாக ஸ்படிக மரகத லிங்கத்திற்கு நித்திய பூஜையாக பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜன., 5 அன்று சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜருக்கு அபிஷேகமும் அச்சமயத்தில் தேவார இன்னிசை திருமுறை பாராயணம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்படுகிறது. இரவு 11:00 மணிக்கு மேல் மரகத நடராஜபெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் தொடர்ந்து நடைபெறும். மறுநாள் ஜன., 6 (வெள்ளிக்கிழமை) புதியதாக சந்தனம் காப்பிடப்பட்டு சர்வ மலர் அலங்காரத்துடன், அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அன்று கூத்தர் பெருமான் திருவீதி உலாவும் மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் இரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்து சிறப்பு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை சேதுபதி ராணி ஆர்.பி.கே. ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சரண்யா ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு ; உலக பிரசித்தி பெற்ற, 414வது மைசூரு தசரா விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. தசரா பண்டிகை மற்றும் அது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் ... மேலும்
 
temple news
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ... மேலும்
 
temple news
கரூர்; தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar