Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி கோவிலில் அமாவாசை ஊஞ்சல் ... பழநி மலைக்கோயில் ராஜகோபுர தங்க கலசங்கள் தூய்மை பணி பழநி மலைக்கோயில் ராஜகோபுர தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை ராமகிருஷ்ண மடத்தில் கௌதமானந்தஜி மகராஜ் பக்தர்களுக்கு ஆசி
எழுத்தின் அளவு:
மதுரை ராமகிருஷ்ண மடத்தில் கௌதமானந்தஜி மகராஜ் பக்தர்களுக்கு ஆசி

பதிவு செய்த நாள்

24 டிச
2022
05:12

மதுரை : அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் துணைத் தலைவர்களில் ஒருவர் பரம பூஜனீய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ்
22.12.2022ம் தேதி முதல் 25.12.2022 ம் தேதி வரை ராமகிருஷ்ண மடத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

அவர் இன்று 24ம் தேதி மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவில் அவர் பின்வருமாறு கூறினார்:
 
‘நாம் ஏன் ஆன்மிகத்தை பின்பற்ற வேண்டும்?’ என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் எழுகிறது. ஏனென்றால், நமது மனதில் நிலையான ஆனந்தம் ஏற்பட வேண்டும். அப்படி ஆனந்தம் ஏற்படுவதற்கு உரிய முதல் மற்றும் முடிவு ஆன்மிகத்தை பின்பற்றறுவதுதான் ஒரே வழி. இந்த ஆன்மிக ஆனந்தத்தை பின்பற்றுவதற்கு பலவிதமான உதாரணங்களை நமது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நமக்கு அருளியிருக்கிறார். முழு மனதுடன் பகவானின் நாமத்தை ஜபம், பிரார்த்தனை செய்வதால், பகவான் நமக்குச் சொந்தமாகிவிடுவார். ஆன்மிக ஆனந்தத்தை எப்படி அடைய முடியும்? எளிய ஆன்மிக சாதனைகளின் மூலம் அடையலாம். ஜபம், தியானம், பிரார்த்தனை போன்ற ஆன்மிக சாதனைகளின் மூலம், நாம் நம் இதயத்தைத் தெய்விகமயமான சிந்தனைகளால் நிரப்பி வைத்திருந்தால்தான்  ஆன்மிக  இன்பத்தை அனுபவிக்க முடியும். தொடர்ந்து செய்யப்படும் பிரார்த்தனையின் மூலம் இறைவனுடன் தொடர்புகொள்வதுதான், ஆன்மிக சாதகர்களுக்குச் சுலபமானது. ஆன்மிக ரீதியில் இறைவனுடன் இணைந்த வாழ்க்கையே இன்பமாகும். இறைவன் திருநாமத்தை இடைவிடாமல் ஜபம், பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்விதம் செய்பவர்களுக்கு நிச்சயம் இறைவனின் அருள் கிடைக்கும். மனதை இறைவனை நோக்கிச் செலுத்தினால், மனம் தெளிவாகவும் சாந்தமாக, ஆனந்தமாகவும் இருக்கும். இவ்வாறு சொற்பொழிவாற்றினார். பரம பூஜனீய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் அவர்கள் மதுரையிலிருந்து நாளை 25ம் தேதி சேலம், ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான இன்று கருட சேவை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar