Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னதானம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் ரூ.3.17 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்
எழுத்தின் அளவு:
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் ரூ.3.17 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்

பதிவு செய்த நாள்

31 டிச
2022
05:12

தேவதானப்பட்டி: புத்தாண்டை வரவேற்கும் விதமாக மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சுப மங்கள மார்கழிமாதம் பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர்.

தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான கோயில். இக்கோயிலுக்கு தமிழக உட்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்து கோயிலில் அம்மனை வணங்குவர். தினமும் மாலை 6:00 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பக்தர்கள் உத்தரவு கேட்பது வழக்கம்‌. இதனால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கோயிலில் வளர்ச்சி திட்டப்பணிகள்: செயல் அலுவலர் வேலுச்சாமி கூறுகையில் கோயில் வளாகப் பகுதியில் ரூ. 2.17 கோடியில் திருமண மண்டபம், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் பணிகள் துவங்க உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நச்சரிப்பு செய்த நான்கு பூஜாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரம்பரை நிர்வாக அறங்காவலர் கனகராஜ் பாண்டியன் கூறுகையில்: ஐந்து தலைமுறையாக கோயிலை நிர்வாகித்து வருகிறோம். 800 ஆண்டுகளாக 24 மணி நேரம் அணையாத நெய் விளக்கு எரிகின்றது. காமாட்சியம்மன் அருளால் 2023 புத்தாண்டு மட்டுமல்ல அனைத்து ஆண்டுகளும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar