தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை பஜன் மற்றும் விளக்கு பூஜை நடந்தது.ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பூம்பாறை குழந்தை வேலப்பர், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலிலும் கார்த்திகை விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.