Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குத்தாலம் கோனேரிராஜபுரம் நடராஜர் ... பாலையூர் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் பாலையூர் வேதநாயகி சமேத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: சுவாமி திருவீதியுலா
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்: சுவாமி திருவீதியுலா

பதிவு செய்த நாள்

06 ஜன
2023
10:01

தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பத்தாவது நாளான இன்று ஆருத்ரா தரிசன காட்சி வெகு சிறப்பாக நடந்தது.

மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, கடந்த, 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒன்பது நாட்களும் நாள்தோறும் காலையும், மாலையும் திருவெம்பாவை, மாணிக்கவாசகர் திருவீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று, மாலை, 4:30 மணிக்கு,  சாயரட்சைபூஜை, மாலை, 6:00 மணிக்கு, சிவகாமி அம்பாள் கிளிவாகனசேவை நடந்தது. அதனைத்தொடர்ந்து, அன்னூஞ்சல் நடந்தது. பத்தாம் நாளான இன்று அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தனூர் மாத பூஜையும், கால சந்தி பூஜையும் நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 4:05 மணிக்கு, மகா அபிஷேகம் துவங்கியது. இதில், நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்பாளுக்கும், பால், தயிர், நெய், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பன்னீர், கரும்புச்சாறு,விபூதி, கலசாபிஷேகம், வில்வபொடி,மாவுப்பொடி, குங்குமம், நெல்லி, திருமஞ்சாரம், பஞ்சாமிர்தம், பழச்சாறு ஆகிய 18 அபிஷேகம் நடந்தது. காலை, 8:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். அதனைதொடர்ந்து, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம் வழியாகவும், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து, மீண்டும் கனக சபை மண்டபத்தில் எழுந்தருளினர். ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar