Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக ... கோவை வெங்கடேசபெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு கோவை வெங்கடேசபெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஸ்திரேலியாவில் அட்டூழியம்: மீண்டும் கோயிலில் தாக்குதல்
எழுத்தின் அளவு:
ஆஸ்திரேலியாவில் அட்டூழியம்: மீண்டும் கோயிலில் தாக்குதல்

பதிவு செய்த நாள்

18 ஜன
2023
02:01

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் ஒரு கோவிலை தாக்கி சேதப்படுத்தியதை அடுத்து இங்கு வசிக்கும் ஹிந்துக்கள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்வாமி நாராயண் கோவில் மீது சமீபத்தில் சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கோவிலின் பல இடங்கள் சேதம் அடைந்தன. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் கோவிலில் எழுதி வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள காரம் டாவ்ன்ஸ் நகரில் பிரசித்தி பெற்ற சிவா விஷ்ணு கோவில் உள்ளது. இது புலம் பெயர்ந்த தமிழர்களின் முக்கியமான வழிபாட்டு தலமாக உள்ளது. இந்த கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் தாக்கி சேதப்படுத்தினர்; எதிர்ப்பு வாசகங்களையும் எழுதி வைத்திருந்தனர்.இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உஷா செந்தில்நாதன் என்ற பக்தை கூறியதாவது: நாங்கள் இங்கு சிறுபான்மையினராக வசிக்கிறோம். எங்கள் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதை ஏற்க முடியாது. வன்முறையாளர்கள் மீது ஆஸ்திரேலியா அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர்கூறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து கவுன்சில் நிர்வாகி மக்ராண்ட் பகவத் கூறுகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியத்துக்கு ஆஸ்திரேலியஅரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். மெல்போர்ன் ஹிந்து கவுன்சில் உறுப்பினர் சச்சின் மகதே கூறுைகயில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு தைரியம் இருந்தால் விக்டோரியா பார்லிமென்ட் சுவற்றில் ஆதரவு கோஷங்களை எழுதட்டும். எங்கள் வழிபாட்டு தலம் மீது கை வைக்க வேண்டாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar