Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பொங்கல் திருநாள் மதச்சார்பற்ற ... காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் பாலாலயம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவிலில் அரவான் திருக்கல்யாண திருவிழா
எழுத்தின் அளவு:
கூத்தாண்டவர் கோவிலில் அரவான் திருக்கல்யாண திருவிழா

பதிவு செய்த நாள்

19 ஜன
2023
11:01

அன்னூர்: கூத்தாண்டவர் கோவிலில் அரவான் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.

அன்னூரில் பழமையான கூத்தாண்டவர் கோவிலில் கொரோனா காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் உடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி வரை தினமும் இரவு கம்பம் சுற்றி ஆடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 17ம் தேதி இரவு குன்னத்தூராம் பாளையம், கூத்தாண்டவர் கோவிலில் இருந்து ஆபரண அணிகலன்கள் அன்னூர் அரவான் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. நேற்று அதிகாலையில் அரவான், அனுமான் சாமிகள் அலங்காரத்துடன் எழுந்தருளினர். நாகமாபுதூர், குன்னத்தூராம்பாளையம் மக்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். அரவான், பொங்கி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது, மாலையில் சுண்டைக்காய் நீராடும் நிகழ்ச்சியும், அபிஷேக பூஜையும் நடந்தது. அன்னூர் நகர பொதுமக்கள் மாலையில் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அரவானை வழிபட்டனர். இன்று அரவான், பொங்கி அம்மன், அனுமான் சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது. இதையடுத்து சாணாம் பாளையம், சாலை பாளையம், அல்லி குளம் மக்கள் சார்பில் மாவிளக்கு எடுத்து வருகின்றனர். இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. காட்டம்பட்டி குழுவினர் அரவான் சரித்திரம் வாசிக்கின்றனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் அரண்மனை மாவிளக்கும், அன்னூரில் முக்கிய வீதிகளில் வழியாக அரவான் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar