Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை ... பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை காண 41 ஆயிரம் பேர் முன்பதிவு பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்கூரில் 22ம் தேதி கருட சேவை உற்சவம்: முன்னேற்பாடுகள் பணி குறித்து ஆலோசனை
எழுத்தின் அளவு:
நாங்கூரில் 22ம் தேதி கருட சேவை உற்சவம்: முன்னேற்பாடுகள் பணி குறித்து ஆலோசனை

பதிவு செய்த நாள்

20 ஜன
2023
12:01

மயிலாடுதுறை: நாங்கூரில் 22ம் தேதி கருட சேவை உற்சவம் - முன்னேற்பாடுகள் பணி குறித்து அரசுத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ திருத்தலங்களில் 11 திவ்யதேச கோயில்கள் ஓரே பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் தை மாதம் கருடசேவை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  தங்க கருடசேவை உற்சவம் வருகிற 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது இந்த நிலையில் சீர்காழி ஆர்டிஓ. அலுவலகத்தில் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சுந்தரம் தலைமையில் கருட சேவை தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் விழா நடக்க ஓரிரு நாள் மட்டுமே இருப்பதால் எந்த முன்னேற்பாடுகளும் சரிவர நடைபெறவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் புகழ்பெற்ற தங்க கருட சேவை உற்சவத்திற்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், கழிவறை உள்ளிட்ட அனைத்து பணிகளும் சிறப்பாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  நேர்முக உதவியாளர் சுந்தரம் தெரிவித்தார். கூட்டத்தில் சீர்காழி  தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன், திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், பூம்புகார் தீயணைப்பு நிலை அலுவலர் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சசிகலாதேவி, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கருட சேவை கமிட்டி செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar