Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்குநேரி வானமாமலை பெருமாள் ... கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் அக்கினி பிரவேச தின வழிபாடு கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளி தேரோட்டம் ரத்து : பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் வெள்ளி தேரோட்டம் ரத்து : பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

23 ஜன
2023
10:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தை அமாவாசை அன்று ஆன்மிக மரபு மீறி வெள்ளி தேரோட்டத்தை ரத்து செய்தனர். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ராமேஸ்வரம் கோயிலில் தை, மாசி, புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் ஆடி திருக்கல்யாணம் 7ம் நாள் விழா ஆகிய ஆண்டுக்கு 4 நாள்கள் கோயிலில் உள்ள 20 அடி உயர வெள்ளி தேர் இரவில் மின்அலங்காரத்துடன் ரத வீதியில் உலா வரும். இது பல நூறு ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஆன்மீக மரபாகும். ஆனால் ஆன்மீக மரபை மீறி ஜன., 21 தை அமாவாசை அன்று வெள்ளி தேர் வீதி உலாவை கோயில் அதிகாரி ரத்து செய்தார். இத்தேர் வீலில் ஏற்பட்ட பழுதை சரி செய்யாமல் விட்டதால், தேரோட்டம் நடக்கவில்லை. அன்றிரவு வெள்ளி தேரோட்டத்தை எதிர்பார்த்து வீதியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து வி.ஹெச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில் : கடந்த அக்., 12ல் வெள்ளி தேரை புதுப்பித்த போது வீலில் சேதமானது குறித்து அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் அதனை சரி செய்ய முன்வரவில்லை. இதனால் பல நூறு ஆண்டுகளாக நடந்த வெள்ளி தேரோட்டம் நேற்று முன்தினம் நடக்கவில்லை. கோயிலுக்குள் தரிசனம் என்ற பெயரில் பக்தரிடம் பணத்தை கறப்பதில் கவனம் செலுத்தும் அதிகாரிகள், ஆன்மிக மரபுகளை காற்றில் பறக்க விட்டு ஹிந்து மத கலாச்சாரத்தை சீரழிக்கின்றனர். இது வேதனைக்குரியது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar