பழநி: பழநி பொருந்தலாறு அணை கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழநி, பாலசமுத்திரம் அருகே பொருந்தலாறு அணை பகுதியில் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.