பதிவு செய்த நாள்
30
ஜன
2023
05:01
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் ரதசப்தமி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு அபிஷேகமும், கெடிலம் நதிக்கரையில் தீர்த்தவாரியும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, விநாயகர், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனி அம்மன் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில், கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.