Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகளை ... ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் மிட்டாய் வழிபாடு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம் : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம் : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
09:02

ராமநாதபுரம்: இராமநாதபுரம் முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. குண்டுகரை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.  பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழா நடந்தது. இக்கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சக்திவேலுக்கு தீர்த்த வாரி உற்சவம் நடந்தது. பின்னர் மாலை 5:00 மணிக்கு முருகன் சக்தி வேலுடன் மயில் வாகனத்தில் முத்து அங்கி அலங்காரத்தில் வீதி வலம் வந்தார். மாலை 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோயிலை அடைந்தார். பின்னர் தீப ஆராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு தீர்க்க வாரி உற்சவம் நடந்தது.
*இன்று காலை 11:00 மணிக்கு நயினார்கோவில் நாகநாத சுவாமிக்கு மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது.

கமுதி: கமுதி அருகே கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் தைப்பூசம் முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. முதுகுளத்தூர்,கமுதி ,அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர்.குமரக்கடவுள் முருகனுக்கு எலுமிச்சம்,பழச்சாறு,திரவிய பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று முதுகுளத்தூர் முருகன் கோயில், வழிவிடு முருகன் கோயில், செல்வி அம்மன் கோயில் ,பத்ரகாளியம்மன் கோயில், கமுதி முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar