Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் பிரம்ம ... மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தெப்பதேர் உற்ஸவம் : தைப்பூச திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பழநியில் தெப்பதேர் உற்ஸவம் : தைப்பூச திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

08 பிப்
2023
08:02

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, தெப்பத்திருவிழா நடைபெற்று உற்ஸவம் நிறைவடைந்தது.

பழநி மலைக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா, ஜன.29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் புதுச்சேரி சப்பரம்,தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் வாகனங்களில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, புறப்பாடு ரதவீதியில் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவில் பிப்.3ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதன்பின் வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளினார். பிப்.4. திருத்தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் ரத வீதிகளில் வலம் வந்தது. (பிப்.7) நேற்று தைப்பூச திருவிழாவில் பத்தாம் நாள் திருவிழாவான நேற்று காலை, வள்ளி, முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால், தெய்வானை கோபித்துக் கொள்ள, வீரபாகு தூதராக சென்று சமாதானம் செய்து, கோயில் கதவை திறக்கும் திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் தெப்ப குள மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி எழுந்தருளி தெப்ப உற்ஸவம் நடந்தது. இரவு கொடி இறக்குதல் நடைபெற்று தைப்பூச உற்சவம் நிறைவு அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar