Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா ... பூங்காவனத்தம்மன் கோவிலில் நாளை மறுநாள் மயான சூறை பூங்காவனத்தம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2023
08:02

துாத்துக்குடி :திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிழக்கு கோபுரம் மற்றும் சால கோபுரம் திருப்பணிகளுக்கான பாலாலயம், பந்தல்கால் நடும் விழா நடந்தது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவங்கி உள்ளன. ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் செப்டம்பரில் துவங்கி நடந்து வருகிறது. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக கோயில் கிழக்கு கோபுரம், சண்முக விலாச மண்டப நுழைவு வாயிலில் உள்ள சாலகோபுரம் திருப்பணிக்கான பாலாலயம் நேற்று காலை 8:00 மணிக்கு நடந்தன. தொடர்ந்து கிழக்கு கோபுரம் அருகில் பந்தல் கால் நடப்பட்டது. மரத்திலான கோபுர சிற்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்வில் ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன், கோயில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் கணேசன் ஹெச்.சி எல் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீமதி சிவசங்கரன், கோயில் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை ஆணையர் வெங்கடேஷ், பேஷ்கார் ரமேஷ், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், வேல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar