Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூர் தெப்ப ஏற்பாடு: ... திருச்செந்துாரில் மாசித் திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் திருச்செந்துாரில் மாசித் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
07:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்ட, கொடியேற்றம், இம்மாதம், 28ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேரை சுற்றியுள்ள பாதுகாப்பு தகரங்கள் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.

கோவை மாவட்டத்தில் வைணவ ஸ்தலத்தில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா, வைகுண்ட ஏகாதசி, மாசி மகத் தேரோட்டம் ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர் திருவிழா, இம்மாதம், 27ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது. 28ம் தேதி கொடியேற்றமும், அன்று இரவு அன்ன வாகனத்திலும், மார்ச் ஒன்றாம் தேதி சிம்ம வாகனத்திலும், அடுத்து அனுமந்த வாகனத்திலும், அரங்கநாதர் பெருமாள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். அதை தொடர்ந்து மூன்றாம் தேதி கருட சேவையும், நான்காம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், ஐந்தாம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆறாம் தேதி காலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏழாம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், எட்டாம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவமும், ஒன்பதாம் தேதி சாற்று முறை சந்தான சேவை உற்சவமும், பத்தாம் தேதி விழா நிறைவும் நடைபெற உள்ளது. விழாவை அடுத்து, தேரை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதற்காக தேரை சுற்றி போட்டுள்ள பாதுகாப்பு தகரங்களை, கழற்றும் பணிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று 9ம் நாளில் காந்திமதி ... மேலும்
 
temple news
கோவை; கோவை பொள்ளாச்சி - ரோடு ரத்தினம் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் -வாராகி அம்மன் கோவிலில் ஐப்பசி ... மேலும்
 
temple news
களியக்காவிளை, செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிதாக கட் டப்பட்ட தேவலோகம் திறப்பு விழா நடந்தது. தமிழக- ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சின்னாம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar