பதிவு செய்த நாள்
03
மார்
2023
05:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசிமக தேர் திருவிழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக ரங்கநாதர் அனுமந்த வாகனத்தில் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கிராம சாந்தி, 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனத்தில், அரங்கநாத பெருமாள், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று அனுமந்த வாகனத்தில் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 5ம் தேதி காலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு யானை வாகனத்தில் உற்சாகமும், ஆறாம் தேதி காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் பெட்டத்தம்மன் அழைப்புக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.