மாசி சனி வழிபாடு : சிவபக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2023 12:03
கோவை : கோவை ராம்நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் உள்ள சிவபக்த ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுவாமி சிறப்பு வஸ்திரம் உடுத்தி, வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.