பதிவு செய்த நாள்
14
செப்
2012
11:09
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்தேரோட்டம் இன்று நடக்கிறது. இங்கு, ஆவணித்திருவிழா, செப்.,5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை 7 மணிக்கு நடக்கிறது. முதலில், விநாயகர் தேர், இரண்டாவதாக சுவாமி தேர், அடுத்து அம்பாள் தேர், அடுத்தடுத்து பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு ரதவீதிகளைச் சுற்றி நிலைசேருகின்றன. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் செய்துள்ளனர்.