Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்தி விநாயகர் கோவிலில் செப்.,19ல் ... ஊட்டியில் 23ம் தேதி விநாயகர் விசர்ஜன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை பெருமாள் கோவில் செப்., 26ல் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2012
12:09

ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், 26ம் தேதி புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நடக்கிறது.
வரும், 19ம் தேதி, மாலை, 7 மணிக்கு, கிராமசாந்தி, நகர சோதனையோடு, திருவிழா துவங்குகிறது. 20ம் தேதி காலை, 7.30க்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை, கொடியேற்றம் நடக்கிறது. மாலை, 7 மணிக்கு அன்ன வாகனத்தில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை, காலை, 6 மணிக்கு, யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. அன்றைய தினங்களில், தினமும் மாலை, 7 மணிக்கு முறையே, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனத்தில் ஸ்வாமி பவனி நடக்கிறது. 25ம் தேதி மாலை 4.30க்கு திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது.
செப்., 26ம் தேதி காலை, 6 மணி முதல் 7.30 மணிக்குள், சுவாமி திருத்தேர் எழுந்தருளல், 9 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி, 26ம் தேதி காலை, 11 மணிக்கு செங்குந்தர் திருமண மண்டபத்தில், அன்னதானம் நடக்கிறது.செப்., 27, 28ம் தேதியன்று, காலை, 6 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. 27ம் தேதி மாலை, 7 மணிக்கு பரிவேட்டை, 28ம் தேதி மாலை, 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி காலை, 4 மணிக்கு மஹாபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு, வடை மாலை சாற்றுதல் நடக்கிறது.தக்காரும், அறநிலையத்துறை உதவி ஆணையருமான வில்வமூர்த்தி, கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar