விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, 5ம் தேதி தேர் திருவிழா, 6ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம், 7ம்தேதி தெப்பல் உற்சவம், 8ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து , கடந்த 9ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடந்து வருகிறது. இதில் 6ம் நாள் உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் காய்கனி அலங்காரத்தில் அருள்பாளித்தனர். முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர்,பன்னீர், தே ன்உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காய்கனி அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருதகிரீஸ்வரர், பாலாம்பிகை , சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.