திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2023 03:03
திருநெல்வேலி : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (17 ம்தேதி) சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் தொடங்கி வைத்தார். கோவிந்தா, நாராயணா கோஷத்தோடு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.