நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவில்கள் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலாயாகம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது.2:00 மணிக்கு யாகவேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவி சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.2:30 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.