மேலுார்: மேலுார் அருகே தும்பைபட்டி வீரகாளியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா நேற்று துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்தனர். நான்கு நாள் திருவிழாவின் முதல் நாள் நேற்று (மார்ச்.21) து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண்ண சுவாமி சிலைகள் தும்பைபட்டி பெரிய மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. மார்ச் 23ல் பெரிய மந்தையில் இருந்து சிலைகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அதனைத் தொடர்ந்து மார்ச்.24ல் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கொண்ட பக்தர்கள் மீண்டும் து. அம்பலகாரன் பட்டியிலிருந்து சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும் கிடாவெட்டி பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறுகிறது.