Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் யானை ... கோவை ராமர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழா கோவை ராமர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.4,411 கோடியில் திருப்பதி ஏழுமலையான் பட்ஜெட்
எழுத்தின் அளவு:
ரூ.4,411 கோடியில் திருப்பதி ஏழுமலையான் பட்ஜெட்

பதிவு செய்த நாள்

23 மார்
2023
03:03

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், 2023 - -24ம் ஆண்டுக்கான பட்ஜெட் 4,411 கோடி ரூபாயில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இது பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், வரும் 2023- - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒப்புதலுடன் சில நிர்வாக முடிவுகளும் எடுக்கப்பட்டன. வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரம் மாற்றத்தால் சாதாரண பக்தர்கள் மிகவும் பயனடைந்துள்ளனர். எனவே, இதே செயல்முறையை தொடர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது.

முக்கியத்துவம் கொரோனா பரவலுக்கு முன், உண்டியல் வருவாய் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது வருவாய் 1,500 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கொரோன பரவல் காலத்தில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, வெர்ச்சுவல் சேவை எனப்படும் இணைய வழி சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதன் வாயிலாக பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே ஏழுமலையான் சேவையில் பங்கேற்று வந்தனர். கொரோனா தொற்று ஓய்ந்த பின்னும், பக்தர்களின் விருப்பப்படி இந்த சேவைகளை தேவஸ்தானம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கோடை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வி.ஐ.பி., பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசன அனுமதி குறைக்கப்பட உள்ளது. மேலும், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் குறைத்து, பொது தரிசனத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது.10 லட்டுகள்திருமலையில் உள்ள லட்டு வளாகத்தில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக, 30 லட்டு கவுன்டர்கள் கட்ட 5.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உளுந்துார் பேட்டையில் பக்தரின் நன்கொடையில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோவிலில், 4.70 கோடி ரூபாயில் சில மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீநிவாசா மேன் பவர் கார்ப்பரேஷனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தரிசனம் மற்றும் சலுகை அடிப்படையில் மாதம் 20 ரூபாய் வீதம் 10 லட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar