பாலமேடு: பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டியில் மருதுபாண்டியர் மற்றும் அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சி மாகாளியம்மன் கோயில் 42ம் ஆண்டு பங்குனி பொங்கல் உற்ஸவ விழா மார்ச்.,27ல் துவங்கியது. சுமங்கலி பூஜையை தொடர்ந்து உலக மக்கள் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று முளைப்பாரி ஊர்வலம், அம்மன் வீதி உலா நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் சக்தி கிடா வெட்டி, பொங்கல் வைத்தும், மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.