Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் ... ராம நவமி : கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம் ராம நவமி : கும்பகோணம் ராமசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் நரசிம்மர் சுவாமி திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
நாமக்கல் நரசிம்மர் சுவாமி திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 மார்
2023
10:03

நாமக்கல்: நாமக்கல், நரசிம்மர் சுவாமி திருத்தேர் பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்., 6ல், தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட சாலிகிராம், நாமக்கல் நகரின் மையத்தில், ஒரே கல்லினால் உருவான மலையாக விளங்கி வருவதாக ஐதீகம். மலையின் மேற்கு பகுதியில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்மர் கோவில், மலையை குடைந்து குடவறை கோவிலாக உள்ளது.

மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயாரோடு அரங்கநாதர் கோவில், குடவறை கோவிலாக அமைந்துள்ளது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்த சயனம் கொண்ட நிலையில், அரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஒரே கல்லால் உருவான மலையின் இருபுறமும், குடவறை கோவில்களை கொண்டு, சிறப்பு பெற்றத்தலமாக நாமக்கல் விளங்குகிறது. கோட்டை பகுதியில், மலைக்கு மேற்குபுறத்தில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நாமக்கல் மலையையும், நரசிம்மரையும் வணங்கிய நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புராண சிறப்பு பெற்ற இக்கோவில்கள், கி.பி., 8ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், இந்த மூன்று கோவில்களிலும், ஒரே நேரத்தில் பங்குனி திருத்தேர் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தேர்த்திருவிழா நேற்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, இணை ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழுவினர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தினமும் காலை, 8:00 மணிக்கு நரசிம்மரும், அரங்கநாதரும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். காலை, 11:00 மணிக்கு குளக்கரை நாமகிரி தாயார் மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம், இரவு, 7:30 மணிக்கு மீண்டும் வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது. ஏப்., 4ல், மாலை, 6:00 மணிக்கு நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில், சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. அதில், பக்தர்கள் சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. ஏப்., 6ல், காலை, 9:00 மணிக்கு நரசிம்ம சுவாமி தேர் வடம் பிடித்தல், மாலை, 4:30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar