ராமேஸ்வரம் கோயில் கருவறை சிலை படம் ; வைரல் : பாதுகாப்பு கேள்வி குறி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2023 10:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கருவறையில் உள்ள சுவாமி சிலையை பக்தர் ஒருவர் மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2013 முதல் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்தனர். மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த அறியுறுத்தினர். ஆனால் துவக்கத்தில் கோயில் கிழக்கு, மேற்கு நுழைவு வாசலில் பக்தர்கள் மொபைல் போன் எடுத்து செல்வதை போலீசார் தடுத்தனர்.
இந்நிலையில் கோயில் கருவறையில் உள்ள சுவாமி சிலையை பக்தர் ஒருவர் மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்து காணிக்கை வசூலிக்கும் தமிழக அரசு, கோயில் பாதுகாப்பில் கோட்டை விட்டு உள்ளது. தற்போது போலீசாரின் அலட்சியத்தால் கோயில் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.