திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 06:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோத்சவ விழாவில் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 29ம் தேதி பங்குனி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடந்தது. 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில், வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 8:30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.