அலகு குத்தி வந்த பக்தருக்கு சாம்பிராணி தூப வரவேற்பு: இஸ்லாமியரின் மதநல்லிணக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 08:04
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 83 வது பங்குனி உத்திர திருவிழாவில் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களை மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சாகுல் ஹமீது சாம்பிராணி துாபம் போட்டு ஆடிப்பாடி வரவேற்றார்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த நேற்று திரண்டனர். அதிகாலை நொச்சியூருணி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். இவர்களை அரண்மனை பகுதியில் சாகுல் ஹமீது சாம்பிராணிதுாபம் போட்டு ஆடி பாடி வரவேற்றார். இதே போல் சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ராமநாதபுரம் பாசி பட்டறை தெரு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று 54 வது ஆண்டாக அன்னதானத்தை ஜமாத் நிர்வாகிகள் வழங்கினர்.