பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
11:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்கமன்னார் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டாள், ரங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை சுப்ரபாதம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம், கோமாதா பூஜை, ஹோம பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு திருமஞ்சன அபிஷேகம், சங்கல்பம், சுதர்சன ஹோமம், திருக்கல்யாண உற்சவம், சாற்றுமுறை தொடர்ந்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம், 1:30 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரண்டு மணிக்கு ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.