ஊஞ்சப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 11:04
கருமத்தம்பட்டி: ஊஞ்சப்பாளையம் மாரியம்மன், க.ராயர்பாளையம் சக்தி மாரியம்மன், சோமனூர் மாகாளியம்மன் கோவில்களில் நேற்று பூச்சாட்டு பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ஊஞ்சப்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கடந்த, 28 ம்தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டது. தினமும் பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். நேற்று அதிகாலை அம்மை அழைத்தலும், திருக்கல்யாண மும் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இதேபோல், க.ராயர்பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் நேற்று மாவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சோமனூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மை அழைத்தலும், திருக்கல்யாணமும் நடந்தது. தொடர்ந்து பூவோடு எடுத்தல், பொங்கல் பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.