பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
12:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு ஜெபக் கூட அபிஷேகம் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா சென்றனர். மதுரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
திருநகர் சீனிவாசா நகரிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் யாகசாலை பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.
திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை முடிந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்து. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது.
சூரசம்ஹார லீலை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா சூரசம்ஹார லீலையை முன்னிட்டு இன்று (ஏப். 6) மாலையில் தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி மட்டும் சம்ஹார அலங்காரத்தில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு எழுந்தருள்வார். எட்டு திக்குகளிலும் சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.