சக்கம்பட்டி பகவதி அம்மன், மதுரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 11:04
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சாலியர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட பகவதி அம்மன், மதுர காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. சாலியர் சமூகத் தலைவர் ராம்ராஜ், பகவதியம்மன் கோயில் நிர்வாக தலைவர் பரமேஸ்வரன் முன்னிலையில் 4 நாட்கள் நடந்த விழாவின் முதல் நாளில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் அங்க பிரதட்சணம் செய்தனர். 2ம் நாளில் பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலம் சென்று புண்ணியவாசம் மேற்கொண்டு அம்மன் கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். இரவில் நாதஸ்வர இசையுடன் அம்மன் சக்கம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 3,4ம் நாளில் பொதுமக்கள் பொங்கலிட்டு, தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல், பாலபிஷேகம் நிகழ்ச்சிகளுக்குப் பின் அம்மன் அலங்கார ரதத்தில் வாண வேடிக்கைகளுடன் நாதஸ்வர இசையுடன் பூஞ்சோலை அடைந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.