ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி கோரதம் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2023 04:04
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பங்குனி உற்சவத்தின் முக்கிய திருநாளான இன்று கோரதம் நடந்தது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிபிரம்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா (கோரதம்) கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கோரதம் தேரோட்டம் இன்று நடந்தது. இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டனர். நாளை 7ம் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.