Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேயர் கோவில் நிலத்தை ஆட்டையை ... இன்று இரவு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குருபகவான் : யார் பரிகாரம் செய்ய வேண்டும்? இன்று இரவு மேஷ ராசிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் அருகே ஒரே இடத்தில் 89 நடுக்கற்கள் : அறம் வரலாற்று ஆய்வு மையம் நேரில் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே கூலிசந்திரத்தில், ஊர் பண்டிகை நடக்கும் பொதுஇடத்தில், தமிழகத்திலேயே முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான, 89 நடுக்கற்கள் ஆங்காங்கு பராமரிப்பின்றி உள்ளன. இதை, அறம் வரலாற்று ஆய்வு மையம் தலைவர் அறம் கிருஷ்ணன் மற்றும் மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா ஆகியோர் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

இது குறித்து, அறம் கிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்திலேயே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், 8ம் நுாற்றாண்டு துவங்கி, 18ம் நுாற்றாண்டு வரையிலான நடுகற்கள் அதிகளவில் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஓசூர் தேர்ப்பேட்டையில், -20, கொத்துார், 28, சின்னகொத்துார், 25, சிங்கிரிப்பள்ளி, -74, நாகொண்டபாளையம், 45, ஒன்னல்வாடி, -24, உளிவீரனப்பள்ளி, 32, தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளியில், -48, பாகலுார் அருகே குடிசெட்லுவில், 25, காவேரிப்பட்டணம் அருகே பென்னேஸ்வர மடத்தில், 25, தொகரப்பள்ளி அருகே, 15க்கும் மேற்பட்ட நடுக்கல் தொகுப்புகள் உள்ளன. கூலிசந்திரத்தில் ஒரே இடத்தில் மொத்தமாக, 89 நடுக்கற்கள் உள்ளன. இதை குறும்பர் இன மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுக்கற்கள், 14ம் நுாற்றாண்டு துவங்கி, 18ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. ஒரே இடத்தில் எந்த பராமரிப்புமின்றி சிதறி கிடக்கின்றன. இங்கு கட்டப்பட்டு வரும் சிவன் கோவிலின் பிராதன வளாகத்தை சுற்றி, நடுக்கற்களை வைத்து பராமரிக்கும் நோக்கில் வேலைகள் நடக்கிறது. வரலாற்று பொக்கிஷமான நடுக்கற்களை பாதுகாக்க, அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பாக, ஊர்மக்களிடம், 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar