Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர் முத்துவடுகநாதர் கோயில் ... சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ; குவிந்த தமிழக கேரள பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ; குவிந்த தமிழக கேரள பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 மே
2023
04:05

கூடலுார்: தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் தமிழக கேரள பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். தமிழக வனப்பாதை பளியன்குடி, நாயக்கர் தொழு வழியாக கூடுதல் பக்தர்கள் சென்றனர்.

தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., தூரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ.,தூர நடைபாதையும் உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பராமரிப்பின்றி கிடந்த இக்கோயில் வளாகத்தில் முட்புதர்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டிருந்தது. கண்ணகி பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் அங்குள்ள துர்க்கை அம்மன், சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணியளவில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மலர் வழிபாடு, பொங்கல் வைத்தலும், மாலையில் பூமாரி நிகழ்ச்சியும் நடந்தது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களை அழைத்துச் செல்ல 250 ஜீப்புகள் இயக்கப்பட்டன.கேரள வனப்பாதையில் ஜீப்பிலும், நடந்தும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர்.

தமிழக வனப்பாதை: கேரள வனப்பகுதி வழியாக செல்லும் போது கேரள வனத்துறையினரின் கெடுபிடிகளை தவிர்க்க இந்த ஆண்டு தமிழக வனப்பகுதி பளியன்குடி வழியாக 3 ஆயிரத்து 280 பக்தர்கள் நடந்து சென்றனர். பளியன்குடி வனப்பாதையில் கூடலூர் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் உணவு வசதியும், மருத்துவ முகாமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு முதன் முறையாக தமிழக வனப் பகுதியில் மற்றொரு பாதையான நாயக்கர்தொழு, பஞ்சு புல்தேரி வழியாக கோயில் வரை செல்லும் 3.8 கி.மீ., தூர வனப்பாதையிலும் 200 பேர் வரை நடந்து சென்றனர். தமிழக வனத்துறையினர் ஆங்காங்கே முகாமிட்டு பக்தர்களுக்கு உதவினர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பிரசாதம்:  கண்ணகியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள் மற்றும் பெண்களுக்கு வளையல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அட்சயப் பாத்திரம் மூலம் அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar