பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உஜ்ஜையனூர் குண்டுகல் மாரியம்மன் திருக்கோவில் திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.
கோவிலில் கடந்த, 24ம் தேதி பூ கேட்டல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கம்பம் நடுதல், சக்தி கரகம் அழைத்தல், அக்னி சட்டி பூவோடு எடுத்து அம்மனை வழிபடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தோரணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை அம்மன் அழைத்தல், அம்மன் திருக்கல்யாணம், மதியம் மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மாகாளியம்மன் கரகம் அழைத்து வருதல், புதன்கிழமை அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், அபிஷேக ஆராதனை, மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, குண்டுகல் மாரியம்மன் திருக்கோவில் திருவிழா குழுவினர், விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.