சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 06:05
சின்னாளபட்டி: சின்னாளபட்டி கோயில் விழாவில், இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர். சின்னாளபட்டி நடூரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்வது பிரசித்தி பெற்றது. கப்பலார்தெகை தேவாங்கர் சமுதாயத்தினர் சார்பில், இந்தாண்டிற்கான விழா மே 19ல் கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, சின்னாளபட்டி விலக்கு பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் அழைத்து வருதல் இன்று நடந்தது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை, கத்தியில் பூ சுற்றி, காதோலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் கரக ஊர்வலம் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், சவுடம்மா தீசுக்கோ என்ற கோஷத்துடன், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தபடி அழைத்து வந்தனர். அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.