Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில் உண்டியல் காணிக்கை 18 கிலோ ... சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் சின்னாளபட்டி கோயில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் இணை ஆணையர் நியமிக்காமல் இழுத்தடிப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் இணை ஆணையர் நியமிக்காமல் இழுத்தடிப்பு

பதிவு செய்த நாள்

23 மே
2023
05:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இணை ஆணையரை நியமிக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.

ராமேஸ்வரம் கோயிலுக்கு ஓராண்டில் 2 கோடிக்கு மேலான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தல், கோயில் பூஜைகள், அபிஷேகம், திருவிழாக்கள், கோயில் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக இணை ஆணையர், தக்கார் கண்காணித்தனர். 2022ல் இக்கோயிலுக்கு துணை ஆணையரை நியமித்து கோயில் நிர்வாக தரத்தை குறைத்தனர். மேலும் ஓராண்டாக தக்கார் நியமிக்காமல் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது. இதனால் கோயிலில் திட்ட பணிகள், பூஜை, வழிபாடு முறையை கண்காணிக்கவும், நிர்வாக சிக்கல் ஏற்படுகிறது. இச்சூழலில் கடந்த மார்ச்சில் இக்கோயிலுக்கு மீண்டும் இணை ஆணையர் தரத்திற்கு உயர்த்தி அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை இணை ஆணையர் நியமிக்கவில்லை. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து வி.எச்.பி., தென் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : ஹிந்து கோயில் வழிபாடு முறையை சீர்குலைக்கவே தமிழக அரசு இக்கோயிலின் நிர்வாக தரத்தை குறைத்து, ஓராண்டாக தக்கார் நியமிக்காமல் உள்ளது. காணிக்கை, தரிசனம் என பக்கரிடம் இருந்து பணம் பறிப்பதே நோக்கமாக உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவோ, பூஜை, சமய சடங்குகளை பின்பற்றவோ அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. எனவே இணை ஆணையர், தக்காரை நியமிக்க கோரி ஒரு கோடி பக்தரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar