ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2023 10:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதற்கான பணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பு நாள் செய்து துவக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 14 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 22ல் தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி கீழ ரத வீதியில் தேரின் முன்பு நடந்தது. கோயில் பட்டர்கள் பத்ரி நாராயணன் மற்றும் ஹரிஷ் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேரின் மேல் அலங்காரம் செய்வதற்கான மரத்தூண்கள் நடப்பட்டது. இதனையடுத்து செப்பு தேர், 16 சக்கர வண்டி சப்பரத்திற்கும் நாள் செய்யும் விதமாக பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து தேரினை சீரமைக்கும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வெங்கடேஷ் பட்டர் ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி, திருவிழா மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.