கோவை ; மசக்காளிபாளையம் அழகுமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்தல்,யாக சாலை பூஜைகள், கலசம் வைத்தல் நடந்தது. இன்று காலை யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிற்ப்பாக நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மேல் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலககத்த அழகுமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.