Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மசக்காளிபாளையம் அழகுமாரியம்மன் ... வீரமாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வீரமாச்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மே
2023
03:05

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாம சுந்தரி அம்பாள் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். நேற்று மாலை திருநாகேஷ்வரர் சன்னதியில் யாகசாலை பூஜைக்கு பின் அம்மன் சன்னதி வில்வமரத்திற்கு  அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர்,அஸ்திரதேவர், கொடிப்படம் திருவீதி வலம் வந்தது. அதிகாலை 5:45 மணிக்கு கணபதிபூஜையுடன் யாக பூஜைகள் மற்றும் கொடிபடத்திற்கும் பூஜை நடந்தது. பூஜைகளில் ரமேஷ்குருக்கள், பாஸ்கரக் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர்.  பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன.  தொடர்ந்து காலை 6:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்து அலங்காரத் தீபாராதனையும், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபராதனையும் நடந்தது. அடுத்து பஞ்ச மூர்த்திகளும் திருநாள் மண்டபம் எழுந்தருளினர்.  ஊரார்,மண்டகப்படிதாரர்கள்,பைராவி காசி வைரவன்,பேஷ்கார் சந்திரசேகர்,கண்காணிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாலையில் வில்வமரம்,கொடிபடம், சுவாமிகளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கியது. முதலாம் திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சூரிய,சந்திர பிறைகளில் எழுந்தருளிய உற்ஸவ சுவாமி-அம்பாளுக்கு தீபராதனை நடந்து திருவீதி வலம் வந்தனர். திருப்புத்தூர் வட்டார நாயுடு மகாசன சங்கத்தினர் சார்பில் முதலாம் திருநாள் மண்டபகப்படி நடந்தது. தொடர்ந்து தினசரி இரவு வாகனங்களில் சுவாமி,அம்பாள் திருவீதி வலம் வருவர். ஜூன்1 ல் தேரோட்டமும், ஜூன்2 ல் தெப்பமும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேதங்களில் முதன்மையான ரிக் வேதம் சரஸ்வதியை போற்றுகிறது. ஆயகலைகள் அறுபத்தி நான்கிற்கும் உரியவள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar