Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலுார் துரோபதையம்மன் கோயிலில் ... புதிய பாராளுமன்றம் நாளை திறப்பு; டில்லி சென்றடைந்த 19 ஆதீனங்கள் புதிய பாராளுமன்றம் நாளை திறப்பு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புஷ்ப பல்லாக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மன்; பூக்கள் தூவி பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
புஷ்ப பல்லாக்கில் பவனி வந்த  ஆகாச மாரியம்மன்; பூக்கள் தூவி பக்தர்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

27 மே
2023
11:05

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே  நாச்சியார்கோவில், ஆகாச மாரியம்மன் திருவிழா  அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பவனி நடந்தது. கூடை கூடையாக பூக்களைத் தூவி பக்தர்கள் அம்மனை வரவேற்று வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே  நாச்சியார் கோவிலில், ஆகாச மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது  ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சமயபுரத்திலிருந்து மாரியம்மன் மல்லிகைப்பூவும் கைவளையலுக்கும் ஆசைப்பட்டு ஆண்டுக்கு 15 தினங்கள் இங்கு வந்து தங்குவதாக ஐதீகம். இங்கு ஆண்டு முழுவதும் அம்மன் உருவம் இல்லாமல் ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருக்கும் இதனையே அம்மனாக வழிபட்டு வருகின்றனர். வைகாசி திருவிழாவினையொட்டி நேற்று அரசலாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து  திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில்,  ஆகாச மாரியம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில்  நள்ளிரவில் பவனி நடைபெற்றது.  திருநறையூர், நாச்சியார் கோவில் கிராமங்களில் முக்கிய வீதிகள் உலா வந்த அம்மன்  இன்று காலை கோவிலை வந்தடைந்தது.  பூக்களை தூவி பக்தர்கள் வரவேற்றனர் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் இதனைத் தொடர்ந்து  லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தினமும் காட்சி கொடுப்பார் வரும் 4ம் தேதி  பெரிய திருவிழாவும்,  7ம் தேதி சிறிய தேரில் அம்மன் வீதி உலா வந்து பிறகு சமயபுரத்திற்கு அம்மன் எழுந்தருளுடன் இவ்வாண்டுக்கான விழா இனிதே நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar