Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் ... தங்க கருட வாகனத்தில் எமனேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட பழமையான விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2023
04:05

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே பரளச்சி மேலையூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விநாயகர் சிற்பம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே பரளச்சி மேலையூர் கிராமத்தில் பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த ஜோதிலிங்க கருப்பசாமி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சென்று கள ஆய்வு செய்தபோது, அந்தச் சிற்பம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பம் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் கூறியதாவது : தமிழகத்தில் பாண்டிய தேசங்களில் தொடர்ந்து அவர்கள் ஆட்சியின் போது எண்ணற்ற கோயில் திருப்பணிகள் செய்துள்ளனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக சிற்பங்களும் கல் எழுத்துகளும் கிடைத்து வருகின்றன: அவற்றில் தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமும் பாண்டியர்களின் திருப்பணியில் உருவானவை. இந்த சிற்பம் இரண்டரை அடி உயரம் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்று ஆயுதத்தையும் தாங்கிய படியும், முன்னிரு கரங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தலையில் மகுடம் தரித்தும், புஜங்களில் ஆபரணங்கள் அணிந்தும், தும்பிக்கையானது மோதகத்துடனும், சிற்பம் முக்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலை நயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தை பார்க்கும் போது இந்த பகுதியில் பெரிய முற்கால பாண்டியரின் சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அவை கால ஓட்டத்திலோ அல்லது அந்நிய படையெடுப்பிலும் அழிந்து இருக்கலாம் என, கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar